செப். 1ல் பள்ளிகள் திறப்பு; சுழற்சி முறையில் மாணவர்களை வரவழைக்கத் திட்டம்: அன்பில் மகேஷ்

by Admin / 11-08-2021 02:17:26pm
செப். 1ல் பள்ளிகள் திறப்பு; சுழற்சி முறையில் மாணவர்களை வரவழைக்கத் திட்டம்: அன்பில் மகேஷ்

 

தமிழகத்தில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களை செப்டம்பர் 1 முதல் சுழற்சி முறையில் பள்ளிக்கு வரவழைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசினார்.

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து பேசிய அவர்,

கரோனா தொற்று குறைந்துள்ளதை அடுத்து, பல்வேறு மாநிலங்களில் வெவ்வேறு கட்டங்களாக பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன

தமிழகத்தில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளைத் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சுழற்சி முறையில் மாணவர்கள் வர திட்டமிடப்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களில் வெவ்வேறு கட்டங்களாக பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன என்றார்.

 

Tags :

Share via