நாட்டில் 50 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள்
பிரதமர் நரேந்திர மோடி லட்சியமாக கொண்டு வந்த ஜன்தன் கணக்குகள் தொடர்பான முக்கிய புள்ளி விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. நாட்டில் ஜன்தன் வங்கிக் கணக்குகள் 50 கோடியைத் தாண்டிவிட்டன. 56 சதவீத ஜன்தன் கணக்குகள் பெண்களின் பெயரில் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஜன்தன் கணக்குகளில் ரூ.2 லட்சம் கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதித்துறை தெரிவித்துள்ளது. ஜன்தன் திட்டம் எனப்படும் பிரதமர் மக்கள் நிதி திட்டம் வீட்டுக்கு ஒரு வங்கிக் கணக்கு இருக்கும் வகையில் புதிய திட்டத்தை பிரதமர் மோடி 28 ஆகஸ்டு 2014 அன்று டெல்லியில் தொடங்கி வைத்தார்.
Tags :