மணிப்பூர் கலவரம் - அறிக்கை சமர்ப்பிப்பு

by Staff / 21-08-2023 01:32:59pm
மணிப்பூர் கலவரம் - அறிக்கை சமர்ப்பிப்பு

மணிப்பூர் மாநிலத்தில் வசிக்கும் மேதி இன மக்கள், தங்களை எஸ்.டி பிரிவில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால் இதற்கு பழங்குடியின மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மணிப்பூரில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக கலவரம் நடந்து வந்த நிலையில், மாநிலமே முடங்கி கிடந்தது. இந்நிலையில், மணிப்பூர் கலவரம் தொடர்பாக ஓய்வு பெற்ற 3 பெண் நீதிபதிகள் அடங்கிய குழு உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. மேலும், கலவரத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை விசாரித்து நிவாரணம், மறுவாழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள குழு அமைக்கப்பட்டது.

 

Tags :

Share via