வரலாற்று ஆய்வாளர் ஒரிசா பாலு காலமானார்.

ஒரிசா பாலு என அறியப்படும் வரலாற்று தமிழ் ஆய்வாளரும், எழுத்தாளருமான சிவ பாலசுப்பிரமணி (வயது 60) உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். சென்னை குரோம்பேட்டையில் உள்ள மருத்துவமனையில் புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது உயிர் பிரிந்தது. குமரி கண்டம், லெமூரிய கண்டம் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டவர். ஆமைகள் மூலமாக நீரோட்டத்தை அறிந்து பழங்கால தமிழர்கள் கடல் பயணம் மேற்கொண்டதை அறிந்தவர் ஒரிசா பாலு. இவரது மறைவுக்கு தலைவர்கள், பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Tags : வரலாற்று ஆய்வாளர் ஒரிசா பாலு காலமானார்.