கள்ளக்குறிச்சி மாவட்டம்: த. வெ. க., நிர்வாகிகள் 2 பேர் பலி.
திருச்சி மாவட்டம், மலைக்கோட்டையைச் சேர்ந்தவர் லட்சுமணன் மகன் சீனிவாசன், திருச்சி தெற்கு மாவட்ட த. வெ. க., இளைஞரணி தலைவர். இவரது தலைமையில் ஏழு பேர், விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் நேற்று நடந்த மாநில மாநாட்டில் பங்கேற்க, 'இனோவா' காரில் வந்து கொண்டிருந்தனர்.
திருச்சி, பெரியசெட்டி தெருவைச் சேர்ந்த தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது காரின் பின் வலதுபக்க டயர் வெடித்தது. அதில், கட்டுப்பாட்டை இழந்த கார், தேசிய நெடுஞ்சாலையோரம் இருந்த நாவல் மரத்தின் மீது மோதி கவிழ்ந்தது. மேலும், காரில் பயணித்த மலைக்கோட்டை ஜான் மகன் ஹரி, (26), திருவானைக்காவல் கோபால்சாமி மகன் குணசேகரன், (37), வரதராஜன் மகன் ஸ்ரீஹரி, (24), திருச்சி அடுத்த சிங்காரத்தோப்பு அப்துல்ஹக்கீம் மகன் அசார், (25), டிரைவர் அஜய் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள், உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்து குறித்து எடைக்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.
Tags : கள்ளக்குறிச்சி மாவட்டம்: த. வெ. க., நிர்வாகிகள் 2 பேர் பலி