இன்று ஒரே நாளில் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 102 ஆக உயர்ந்தது.

by Editor / 27-03-2023 11:44:19pm
 இன்று ஒரே நாளில் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 102 ஆக உயர்ந்தது.

உலகில் கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கிய கொரோனா தொற்று பரவல் இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு, மக்களுக்கு செலுத்தப்பட்டபோதிலும், உயிரிழப்புகளை தடுக்க முடிந்ததே தவிர, நோய்த்தொற்றிலிருந்து முழுமையாக விடுபட முடியவில்லை. பல்வேறு வகையிலான கொரோனா வைரஸ் தாக்குதலில் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அண்மைக் காலமாக இந்தியாவில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து காணப்படுகிறது. XBB 1.16 என்ற புதிய வகை கொரோனா பரவலால், மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத், தெலங்கானா, தமிழ்நாடு, ராஜஸ்தான், உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில், ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 102 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் தற்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 634 ஆக உள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 76 பேர் இன்று கொரோனா சிகிச்சை முடிந்து  வீடு திரும்பியுள்ளனர்.

 

Tags :

Share via