டெல்லி முதலமைச்சருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்
பிரதமர் நரேந்திர மோடியின் பட்டம் மற்றும் முதுகலை சான்றிதழ்களை காட்டக் கோரி டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு குஜராத் உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இது தொடர்பாக உயர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. மோடியின் சான்றிதழ்களை காட்ட தேவையில்லை என பிரதமர் அலுவலகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மனு தாக்கல் செய்த அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றம் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தது. மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கும், ஆம் ஆத்மி அரசுக்கும் தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Tags :