15 கிலோ கஞ்சாவுடன் பெண்கள் உட்பட 7 பேர் கைது
கொச்சி - எர்ணாகுளம் அம்பலமேடு குழிக்காடு பகுதியிவ் உள்ள லாட்ஜில், கொச்சி நகர போலீசார் மற்றும் அம்பலமேடு போலீசார் கஞ்சாவுடன் 2 பெண்கள் உட்பட 7 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 15 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தமிழகத்தில் இருந்து காய்கறி மளிகை பொருட்களுடன் லாரிகளில் கஞ்சாவை எர்ணாகுளத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். மேலும், இக்கும்பல், ஒடிசா மாநிலம் பலங்கிர் மாவட்டத்தில் உள்ள கஞ்சா மாஃபியாவிடம் இருந்து இடைத்தரகர்கள் மூலம் கொள்முதல் செய்வது விசாரணையில் தெரியவந்துள்ளது.
Tags :