ராணுவ வீரர் பலி.

by Staff / 13-04-2023 12:00:10pm
 ராணுவ வீரர் பலி.

மேட்டூர் அடுத்த வனவாசியை சேர்ந்த தறி தொழிலாளி ரவி (52), செல்வமணி தம்பதியின் இளைய மகன் கமலேஷ் (24). திருமணம் ஆகாதவர்.கமலேஷ் கடந்த 2019-ம் ஆண்டு  இந்திய ராணுவத்தில் சேர்ந்து 4 ஆண்டுகளாக  பணி ஆற்றி வந்தார். இந்நிலையில் பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமிற்குள் நேற்று  அதிகாலை 4 மணி அளவில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூட்டில் குண்டடி பட்டு கமலேஷ் உட்பட நான்கு இராணுவ  உயிரிழந்துனர்.ராணுவ வீரர் கமலேஷ் உயிர் இழந்தது செல்போன் மூலம் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைக் கேட்ட கமலேஷின் குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.இறந்து போன ராணுவ வீரர் கமலேசன் உடன் பஞ்சாபில் வைக்கப்பட்டுள்ளது.
அங்கு ராணுவ உயர் அதிகாரிகள் அஞ்சலி செலுத்திய பின்கமலேஷின் உடல் விமானம் மூலம் தமிழகத்தை இன்று வந்தடைகிறது. பின் அவரது சொந்த ஊருக்கு  கொண்டு வரப்பட்டு இறுதிச் சடங்கு நடைபெற உள்ளது. ராணுவ வீரர் கமலேஷ் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் , உறவினர்கள் மற்றும் கிராம மக்களிடையே  பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags :

Share via