பயங்கர விபத்து 8 பேர் சம்பவ இடத்திலேயே பலி

by Staff / 13-04-2023 11:57:36am
பயங்கர விபத்து 8 பேர் சம்பவ இடத்திலேயே பலி

பஞ்சாப் மாநிலம் ஹோஷியாபூர் மாவட்டத்தில் உள்ள கர் சங்கர் பகுதியில் பாதசாரிகள் மீது லாரி மோதியது. இந்த கோர விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், மேலும், 14 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சரண் சோ குரல் கர் பகுதியில் உள்ள கங்கா சாஹிப் பகுதிக்கு நடந்து சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நடந்ததாக தெரிகிறது. இறந்தவர்களில் சிலர் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.

 

Tags :

Share via