ராணுவ வீரரின் உடலை வாங்க மறுப்பு.

by Staff / 15-04-2023 11:32:10am
ராணுவ வீரரின் உடலை வாங்க மறுப்பு.

பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமில் நடந்த துப்பாக்கி சூட்டில் தமிழகத்தைச் சேர்ந்த யோகேஷ்குமார்(24), கமலேஷ்(24) ஆகியோர் உயிரிழந்தனர். அவர்களின் உடல் டெல்லியிலிருந்து விமானம் மூலம் கொண்டுவரப்பட்டது. கமலேஷின் உடல் சேலம் அருகேயுள்ள அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது கமலேஷ் உடலுக்கு அரசு மரியாதை செலுத்த வேண்டும் எனக்கூறி உடலை வாங்க மறுத்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் ராணுவ வீரரின் உடலுக்கு 12ஆவது பட்டாலியன் சேலம் என்.சி.சி., சார்பில் தேசியக்கொடி போர்த்தப்பட்டு, அஞ்சலி செலுத்தப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

 

Tags :

Share via