நீரில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்குமுதலமைச்சர் மு க ஸ்டாலின் நிதி உதவி அறிவித்துள்ளார்

by Admin / 16-04-2023 04:03:42pm
நீரில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்குமுதலமைச்சர் மு க ஸ்டாலின் நிதி உதவி அறிவித்துள்ளார்

திருப்பூர் கிருஷ்ணகிரி மாவட்டங்களின் சிறுவர்கள் மூழ்கி உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்குதமிழ்நாட்டு முதலமைச்சர் மு க ஸ்டாலின் நிதி உதவி அறிவித்துள்ளார் .அவர் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பூர் மாவட்டம் திருப்பூர் தெற்கு வட்டம் முதலிபாளையம் கிராமம் டி நகர் என்ற முகவரியை  சேர்ந்த இனியவன் மற்றும் சந்துரு ஆகிய இருவரும்  நேற்று  அப்பகுதியில் உள்ள  நொய்யல் ஆற்றில் குளித்த பொழுது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர். என்ற துயரமான  செய்தியை  கேட்டு மிகுந்த  வேதனை அடைந்தேன். இதே போல் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி  வட்டம்  மத்தூர் உள் வட்டம் பற்றா அள்ளி   முத்து நகர் என்ற முகவரியை சேர்ந்த புவனா மற்றும் செல்வன் வினோத் ஆகியோர் நேற்று பர்கூர் வட்டம் நாகம்பட்டி எம் பள்ளத்தூர் ஏரியில் குளித்த போது  எதிர்பாராத  விதமாக நீரில்  மூழ்கி  உயிரிழந்தனர் இந்த செய்தியை கேட்டு மிகுந்த வேதனை  அடைந்தேன். . உயிரிழந்த நான்கு சிறுவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்  அவர்களின் குடும்பத்தினருக்கு தல ஒரு  லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் 

 

Tags :

Share via