தலையை துண்டாக வெட்டி தம்பதி நரபலி
குஜராத் மாநிலத்தில் ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது. ராஜ்கோட் மாவட்டம் விஞ்சியா பகுதியைச் சேர்ந்த தம்பதி ஹேமுபாய் மக்வானா (38), ஹன்சாபென் (35). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்கள் கடவுள் மீது கொண்ட அதீத நம்பிக்கை காரணமாக பலிபீடம் போன்ற சாதனத்தை உருவாக்கியுள்ளனர். பின்னர் சனிக்கிழமையன்று வீட்டில் பூஜை செய்து தங்கள் தலையை தாங்களே வெட்டி பலி கடவுளுக்கு கொடுத்துள்ளனர். மறுநாள் இருவரும் தலையின்றி சடலமாக மீட்கப்பட்டனர். அவர்கள் எழுதிய தற்கொலைக் குறிப்பில், வயதான பெற்றோர் மற்றும் இரண்டு குழந்தைகளை கவனித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டிருந்தனர்.
Tags :