கணவர் மாத்திரை வாங்கி வராததால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை
சேலம் சன்னியாசிகுண்டு காரைக்காட்டை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவருடைய மனைவி ஷாலினி (வயது 25). இவர்களுக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் மகனுக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டதால் மருந்து கடையில் மாத்திரை வாங்கி வருமாறு சுரேஷ்குமாரிடம் ஷாலினி கூறினார்.
ஆனால் சுரேஷ்குமார் மதுபோதையில் மாத்திரை வாங்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஷாலினி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த கிச்சிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும் அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் நேற்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :