மின்சாரம் தாக்கி கணவன், மனைவி பலி
தெலுங்கானா மாநிலம் மஞ்சிரியாலா மாவட்டத்தில் சோக சம்பவம் நடந்துள்ளது. சென்னூர் பொற்கொல்லர் சங்கத் தலைவர் ஸ்ரீனிவாஸ் (44), ஜெயஸ்ரீ (38) ஆகியோர் லினேகட்டா காலனியில் வசித்து வருகின்றனர். வெள்ளிக்கிழமை காலை ஜெயஸ்ரீ வீட்டிலிருந்த கம்பியில் காயப் போட்டிருந்த துணிகளை எடுக்க முயன்றார். அப்போது, அந்த கம்பியில் பாய்ந்த மின்சாரம் தாக்கியதில் அவர் அங்கேயே சரிந்து விழுந்தார். இதைக்கண்ட அவரது கணவர், ஜெயஸ்ரீயை காப்பாற்ற முயன்றபோது, அவரும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
Tags :