துப்பாக்கியால் சுட்டு கடற்படை காவலர் தற்கொலை
நாகை துறைமுகத்தில் உள்ள இந்திய கடற்படை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு பணிபுரியும் காவலர் ஒருவர் இன்று அதிகாலை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். சத்தம் கேட்டு வந்த அதிகாரிகள் காவலரை மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை செய்துகொண்ட காவலர் வேலூரைச் சோந்த ராஜேஷ் என்று தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் காவலர் ஏன் தற்கொலை செய்துகொண்டார்? என்பதை விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags :