நியோ மேக்ஸ் மோசடி: போடியைச் சேர்ந்த தந்தை, மகன் கைது.

by Editor / 27-05-2024 09:25:19pm
நியோ மேக்ஸ் மோசடி: போடியைச் சேர்ந்த தந்தை, மகன் கைது.

மதுரை எஸ்.எஸ்.காலனியில் இயங்கிய நியோமேக்ஸ் நிதி நிறுவனம் மக்களிடம் ரூ.பல கோடி முதலீடு பெற்று மோசடி செய்தது. இதன் இயக்குநர்கள்  வீரசக்தி , கமலக்கண்ணன் , பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோரை மதுரை  பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். 

17 நிறுவனங்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு, ரூ.17.25 கோடி மதிப்பிலான 752 வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்பட்டுள்ளன. இதுவரை நிறுவனத்திற்கு சொந்தமான 19 சொத்துக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.இதன் மதிப்பு ரூ.76 கோடியே 58 லட்சத்து 60 ஆயிரத்து 577ஆகும்,இந்நிலையில் தேனி மாவட்டம் போடியைச் சேர்ந்த பாபு,அவரது மகன் தனுஷ்  ஆகிய 2 நபர்களை பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி., மணீஷா தலைமையிலான போலீசார்  இன்று கைது செய்தனர். பாபு நியோமேக்ஸ் தொடர்புடைய 3 நிறுவனங்களின் இயக்குநராக இருந்தவர். இவரது மகன் ஏஜென்ட் ஆக செயல்பட்டு வந்துள்ளார்.

 

Tags : நியோ மேக்ஸ் மோசடி:

Share via