ஊழலை ஒழிக்க முடியாது.. நீதிமன்றம் அதிரடி
அரசு அதிகாரிகளின் ஊழல் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்ற வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசு அதிகாரிகளின் ஊழல் சொத்துகளை பறிமுதல் செய்ய நடைமுறைகளை வகுப்பது குறித்து தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அதிகாரிகளுக்கு பயத்தை காட்டாமல் அரசு துறைகளில் ஊழலை கட்டுப்படுத்த முடியாது. லஞ்சம் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக அரசு போதிய நடவடிக்கை எடுக்காததால் லஞ்சம் அதிகரித்துள்ளது எனவும் கருத்து தெரிவித்துள்ளது.
Tags :