பெண் கழுத்து நெரிக்கப்பட்டு இறப்பு பிரேத பரிசோதனையில் தகவல் கணவரை தேடும் வேட்டையில் போலீசார்

by Staff / 23-03-2024 12:50:18pm
பெண் கழுத்து நெரிக்கப்பட்டு இறப்பு பிரேத பரிசோதனையில் தகவல் கணவரை  தேடும்  வேட்டையில்  போலீசார்

நித்திரவிளை அருகே உள்ள பூத்துறை பகுதியை சேர்ந்த சஜின் (37) மீன்பிடி தொழிலாளி. இவரது மனைவி ஷானிகா (31). இவர்களுக்கு எட்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆனது. ஆனால் குழந்தைகள் இல்லை.
இரண்டு தினங்களுக்கு முன் இரவு நித்திரவிளையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் மயங்கிய நிலையில் ஷானிகாவை அனுமதித்துள்ளனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து ஷானிகா தந்தை நித்திரவிளை போலீசில் புகார் அளித்தார்.   அவரை கொலை செய்து விட்டதாக புகார் அளித்தார்.   இதற்கிடையே ஷானிகாவின் கணவர் சஜின் மாயமானார்.பிரேத பரிசோதனையில்  குரல்வளை உடைந்ததால்  தான் ஷானிகா  உயிரிழந்தது உறுதியாகியுள்ளது. கடைசி நிமிடங்கள் மிகவும் சித்திரவதை அனுபவித்து இறந்திருக்க வேண்டும் என மருத்துவமனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையில் தலைமறைவான  சஜினை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடல் வேட்டை தொடங்கப்பட்டுள்ளது. அவர் சிக்கினால்தான் உண்மையிலேயே என்ன நடந்தது என்று தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

 

Tags :

Share via