தமிழகம் புதுச்சேரி இரவு முதல் அதிகாலை வரை பரவலாக மிதமான மழை- 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்

by Admin / 02-05-2023 08:35:15am
தமிழகம் புதுச்சேரி இரவு முதல் அதிகாலை வரை பரவலாக மிதமான மழை- 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்

தமிழகம் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இரவு முதல் அதிகாலை வரை பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது சென்னையில் நுங்கம்பாக்கம், தி நகர் .கோடம்பாக்கம், சூளைமேடு, புரசைவாக்கம் கொளத்தூர் ,அண்ணா நகர், மாதவரம் ,வண்ணாரப்பேட்டை, பாரிமுனை, கீழ்பாக்கம் என பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. வேலூ,ர் திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை போன்ற 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது ,தமிழ்நாட்டில் அதிராம்பட்டினம் அதிகபட்சமாக 15 சென்டிமீட்டர் மழை பெய்துஉள்ளது . பல்வேறு பகுதிகளில் ஒன்பது முதல் ஏழு வரை அதிகபட்சமாக மழை பொழிந்துள்ளது இரவில் இருந்து என்றும் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது/ திருநெல்வேலி. தென்காசி மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்வதால் பாபநாசம். குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலை காணப்படுகிறது. கோடையின் வெப்பத்தில் தவித்துக் கொண்டிருந்த தமிழ்நாட்டு மக்களுக்கு இந்த மழை மிகுந்த மகிழ்ச்சியை தந்திருக்கிறது.

 

தமிழகம் புதுச்சேரி இரவு முதல் அதிகாலை வரை பரவலாக மிதமான மழை- 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்
 

Tags :

Share via