போதையில் திராவகத்தை குடித்த வாலிபர் பலி

by Staff / 02-05-2023 11:02:05am
போதையில் திராவகத்தை குடித்த வாலிபர் பலி

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை காவல் நிலையத்துக்கு உட்பட்ட அண்டுகோடு பகுதியை சேர்ந்தவர் ரவி. இவர் மதுபோதைக்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், சம்பவத்தன்று மது அருந்திய நிலையில் போதையில் இருந்து உள்ளார். தொடர்ந்து, வீட்டில் வைக்கப்பட்டிருந்த திராவகத்தை குடித்து உயிருக்கு போராடிய நிலையில் காணப்பட்டார். குடும்பத்தினர், உறவினர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து காவல்துறையில் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via