ஜமாத் தலைவருக்கு மண்டை ஓடு பார்சல்.. 2 பேர் கைது
தஞ்சை: திருவையாறு அருகே முகமது பந்தர் ரஹீம் நகரை சேர்ந்தவர் முகமது காசிம். ஜமாத் தலைவராக இருந்து வருகிறார். இவருக்கு கொரியரில் இருந்து தொலைபேசி மூலம் அலுவலர்கள் தொடர்பு கொண்டு பார்சல் வந்திருப்பதாக தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, பார்சலை கொண்டு வந்து கொடுத்துள்ளனர். நேற்று முகமது காசிம், தனது மகன் முகமது மஹாதிரை பார்சலை பிரித்துப் பார்க்க சொல்லி இருக்கிறார். அப்பொழுது அந்த பார்சலை பிரித்துப் பார்த்தபோது அதில் மண்டை ஓடு இருந்து, துர்நாற்றம் வீசியுள்ளது. அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
Tags :