நீதிபதி வீட்டில் கொள்ளையடித்த நர்ஸ் ஆண் நண்பருடன் கைது.
செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் போக்ஸோ வழக்குகளை விசாரிக்கும் பெண் நீதிபதி வீட்டில் 207 சவரன் நகை கொள்ளை அடித்த செவிலியர் மற்றும் அவரின் ஆண் நண்பரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை அசோக் நகரில் வசித்து வரும் ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை பொறியாளரான மதுரகவியின் மருமகள் போக்ஸோ நீதிபதியாக பணிபுரிந்து வருகிறார். கடந்த ஆறாம் தேதி தனது வீட்டில் இருந்த நகைகளை சரிபார்த்த பொழுது 185 சவரன் நகைகள் மற்றும் ரூபாய் 50,000 ரொக்கம் திருடு போயிருந்தது தெரியவந்தது.இதனைத்தொடர்ந்து அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதித்து விசாரணை முன்னெடுத்த போலீசார் மதுர கவியின் மனைவிக்கு வீட்டிலேயே மருத்துவ சிகிச்சை அளிப்பதற்காக சில நாட்களுக்கு முன் பணி அமர்த்தபட்ட கள்ளக்குறிச்சியை சார்ந்த செவிலியரான தேவி நகைகள் மற்றும் பணத்தைத் திருடி அவரது நண்பரான ஜெகநாதனிடம் கொடுத்து மறைத்து வைத்து இருந்தது தெரிய வந்தது. திட்டமிட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இதுவரையும் கைது செய்த போலீசார் புகாரில் தெரிவிக்கப்பட்ட நகையின் எடையை விட கூடுதலாக கொள்ளையடிக்கப்பட்ட பறிமுதல் செய்தனர்.மேலும் அவர்களிடமிருந்து ரூபாய்.30 ஆயிரம் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
Tags :