ஏரி தண்ணீரில் மூழ்கி வாலிபர் பலி
செஞ்சி அருகே ஏரியில் குளித்த வாலிபர் நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி இருந்தார். செஞ்சி தேசூர்பாட்டையை சேர்ந்தவர் ஏசுதாஸ் மகன் அருள்தாஸ், 22; பிளஸ் 2 படித்துள்ளார். இவர் நேற்று மாலை செஞ்சியை அடுத்த என். ஆர். பேட்டை, எட்டியாந்தாங்கள் ஏரியில் குளித்துக் கொண்டிருந்தார். நீச்சல் தெரியாததால் ஏரியில் இருந்த ஆழமான குட்டையில் மூழ்கி இறந்தார். தகவல் அறிந்த செஞ்சி தீயணைப்பு படையினர் விரைந்து வந்த அருள்தாஸ் உடலை மீட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Tags :