மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவி உயிரிழப்பு

by Staff / 11-05-2023 04:49:32pm
மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவி உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம் அருகே பில்லமநாயக்கன்பட்டியில் மின்சார இஸ்திரி பெட்டி உபயோகப்படுத்தும் போது மின்சாரம் தாக்கி ஸ்வேதா(21) என்ற கல்லூரி மாணவி பலியானார். மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வடமதுரை காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via