கிணற்றில் மூழ்கி விவசாயி பலி

by Staff / 13-05-2023 02:05:47pm
கிணற்றில் மூழ்கி விவசாயி பலி

சங்ககிரி அருகே கஸ்தூரிபட்டி இடையன்காட்டை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 42). விவசாயி. இவர் நேற்று முன்தினம் மாலை தனது விவசாய நிலத்துக்கு சென்றார். அப்போது அங்கிருந்த கிணற்றில் அவர் திடீரென தவறி விழுந்தார். இதனால் அவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.சீனிவாசன் நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு திரும்பாததால், அவருடைய தாய் விவசாய நிலத்துக்கு அவரை தேடி சென்றார். அங்கு கிணற்றின் அருகே சீனிவாசனின் மோட்டார் சைக்கிள் நின்றது. இதனால் சந்தேகம் அடைந்த அவர் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். மேலும் இதுகுறித்து சங்ககிரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்றனர். கிணற்றில் தண்ணீர் அதிகமாக இருந்ததால் சீனிவாசன் உடலை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இதையடுத்து மோட்டார்கள் கொண்டு வரப்பட்டு கிணற்றில் இருந்த தண்ணீர் வெளியேற்றப்பட்டது. பின்னர் சீனிவாசன் உடல் மீட்கப்பட்டது. சங்ககிரி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

 

Tags :

Share via