தீ விபத்தில் காயமடைந்த சிறுமி பலி
செஞ்சி அருகே உள்ள சோமசமுத்திரம் கிராமத்தைச் சோந்த மாதவன் மகள் சாதனா (11). செஞ்சியில் உள்ள தனியாா் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்தாா். கடந்த மாதம் 27-ஆம் தேதி சிறுமி சாதனா தனது வீட்டில் பூஜை அறையில் விளக்கு ஏற்றும்போது அவரது ஆடையில் தீப் பற்றியது. இதில் சிறுமி பலத்த காயமடைந்தாா்.இதையடுத்து செஞ்சி அரசு மருத்துவமனையில் சோக்கப்பட்டாா். பின்னா் தீவிர சிகிச்சைக்காகசெங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கிருந்து சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சாதனா ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து செஞ்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Tags :