சிறுமியை நிர்வாண படம் எடுத்த இளைஞர்கள் கைது

by Staff / 19-05-2023 02:25:43pm
சிறுமியை நிர்வாண படம் எடுத்த இளைஞர்கள் கைது

சிறுமியை காதலிப்பது போல் நடித்து நிர்வாணப் படம் எடுத்த இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். திருவனந்தபுரம் கரும்குளம் பகுதியைச் சேர்ந்த ஆதி என்ற ஆதித்யன் (18), அதியனூர் வெண்பாகல் காலனியைச் சேர்ந்த சூர்யா (18) ஆகிய இருவரையும் பூவார் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். சிறுமியை காதல் வலையில் வீழ்த்தி நிர்வாணமாக படம் பிடித்து, அதனை வைத்து மிரட்டி வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில் குற்றவாளிகள் கைதாகினர்.

 

Tags :

Share via