கோடை வெப்பத்தை எதிர்கொள்வது குறித்த அறிக்கை வெளியிட்டுள்ளார் முதலமைச்சர் மு க ஸ்டாலின்

by Admin / 19-05-2023 11:14:17pm
 கோடை வெப்பத்தை எதிர்கொள்வது குறித்த அறிக்கை வெளியிட்டுள்ளார் முதலமைச்சர் மு க ஸ்டாலின்

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கோடை வெப்பம் அதிகரித்து வருகிறது. இந்திய வானிலை ஆய்வு மையம் 19. 5 .2023 நாளிகிட்ட அறிக்கையில் ,தமிழ்நாட்டில் இயல்பு நிலையை விட இரண்டு முதல் மூன்று டிகிரி கூடுதல் வெப்பம் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது. குறிப்பாக, வேலூர் பகுதியில் 41.8 டிகிரி  சென்டி கிரே,ட்கரூர் பரமத்தி பகுதிகளில் 41.5 டிகிரி சென்டிகிரேட்  வெப்பம் பதிவாகியுள்ளது. மேலும், அடுத்து இரண்டு நாட்களுக்கு இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி கூடுதல் வெப்பம் நிலவக்கூடம் என்றும் இந்திய மாநில ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில் மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் அவர்கள் இது தொடர்பாக 15 5 2023 அன்று செய்தி வெளியேறு மூலமாக பொதுமக்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்கள் மேலும் அதிகரித்து வரும் கோடை வெப்பத்தினால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட வேண்டிய உடனடி நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள் விழிப்புணர் ஏற்படுத்தப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் அரசு தலைமைச் செயலாளர் அவர்களின் தலைமையின் கீழ் பல்துறை ஆய்வு கூட்டம் 17 5 2023 அன்று நடத்தப்பட்டது திறந்த இடங்களில் பணி புரியும் மகாத்மா காந்தி தேச ஊராக வேலை உறுதி திட்ட பணியாளர்கள், வேளாண் தொழிலாளர்கள், கட்டுமான பணியாளர்கள் ,சாலை பணியாளர்கள் தங்களது பணியை காலை முன்கூட்டியே தொடங்கி வேட்பாளியின் தாக்கம் அதிகரிக்கும் முன்னர் முடித்திடும் வகையில் உரிய ஏற்பாடுகளை தொடர்புடைய துணையின் அலுவலர்கள் செய்வதோடு இப்ப பணியாளர்களுக்கு போதுமான குடிநீர் இருப்பு, நிழல் கூடங்கள் மற்றும் முதலாவது வசதி செய்ய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது, பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களான பேருந்து நிலையம், சந்தைகள் மருத்துவமனைகள் ,அரசு அலுவலகங்கள் ,சுற்றுலாத்தலங்கள், வழிபாட்டுத்தலங்கள் உள்ளிட்ட இடங்களில் போதுமான குடிநீர் வசதி இளைப்பாறுவதற்கான நிழல் கூடங்கள் மற்றும் அவசர மருத்துவ வசதிகளுக்கான ஏற்பாடுகளை உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்களும் மேற்கொள்ள அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.. ,தொழிற்சாலைகளில் அமர்ந்து வேலை செய்யும் வசதி மற்றும் கூடுதல் வெப்பம் உற்பத்தியாகும் தொழிற்கூடங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு போதுமான ஓய்வு வழங்கவும் அவசர கால உதவிக்காக அருகில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுடன் ஆம்புலன்ஸ்வுடன் கூடிய சேவைக்கான முன்னேற்பாடுகளை உறுதி செய்யவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என்று தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கோடை வெப்பத்தை எதிர்கொள்வது குறித்த அறிக்கை வெளியிட்டுள்ளார்

 

 

Tags :

Share via