பள்ளி காதல்.. கழுத்தறுத்து கொன்ற தாய்

by Staff / 21-05-2023 12:38:15pm
பள்ளி காதல்.. கழுத்தறுத்து கொன்ற தாய்

தேனி மாவட்டத்தில் 12-ம் வகுப்பு மாணவன் கமலேஷ்வரன் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கமலேஷ்வரன் உடன் படிக்கும் மாணவிவை காதலித்து வந்ததாகவும், அந்த மாணவியின் தரப்பினர் கமலேஷ்வரனை கொலை செய்துள்ளதாக காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மாணவியின் தந்தை சன்னாசி, தாய் தமிழ்செல்வி மற்றும் சகோதரர் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் கமலேஷ்வரனை கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

Tags :

Share via