13 வயது சிறுமி மாரடைப்பால் பலி

by Staff / 21-05-2023 03:06:25pm
13 வயது சிறுமி மாரடைப்பால் பலி

கடந்த சில நாட்களாக இளம் வயதிலேயே மாரடைப்பால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதன்படி, தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகுடம் மாவட்டத்தில் 13 வயது சிறுமி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அனந்தரம் கிராமத்தைச் சேர்ந்த நிஹாரிகா (13) கடந்த வெள்ளிக்கிழமை இரவு நெஞ்சு வலிப்பதாக தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், அவர் தொடர்ந்து வாந்தி எடுக்க ஆரம்பித்ததால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். நிஹாரிகாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே மாரடைப்பால் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Tags :

Share via