புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் குடிசைகளில் தீவிபத்து குடும்பத்தினர் மீட்கப்பட்டதாக உயிர்ச்சேதம் தவிர்ப்பு

by Staff / 01-04-2022 03:39:21pm
புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் குடிசைகளில் தீவிபத்து குடும்பத்தினர் மீட்கப்பட்டதாக உயிர்ச்சேதம் தவிர்ப்பு


ஹிமாச்சல பிரதேச மாநிலம்உனாவில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் குடிசைப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 150 குடிசைகள் முற்றிலுமாக எரிந்து சாம்பலாகின.

பாது  பகுதியில் உள்ள குடிசைகளில் தீ பற்றியதாக கிடைத்த தகவலின் பேரில் தீயணைப்பு வாகனங்கள் விரைந்து சென்று மீட்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

தொழிலாளர்களுக்கும்  அவர்களது குழந்தைகளுக்கும் ஒரே நேரத்தில் மீட்கப்பட்ட தால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

இருப்பினும் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலாகின இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via