விஷ சாராயம் குடித்து உயிரிழப்புகள்: விசாரணை நடத்த ஆளுநரை சந்திக்கும் இபிஎஸ்

by Staff / 22-05-2023 12:28:20pm
விஷ சாராயம் குடித்து உயிரிழப்புகள்: விசாரணை நடத்த ஆளுநரை சந்திக்கும் இபிஎஸ்

விஷ சாராய உயிரிழப்புகள் தொடர்பாக விசாரணை நடத்த அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் பேரணியாக சென்று ஆளுநரிடம் இன்று அதிமுகவினர் மனு அளிக்க உள்ளனர். விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நிகழ்ந்த விஷச்சாராய உயிரிழப்புகள், அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் ஆடியோ விவகாரம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து உரிய விசாரணை நடத்த வலியுறுத்தி அதிமுகவினர் இன்று ஆளுநரை சந்திக்க உள்ளனர். தமிழ்நாட்டில் நேற்றைய தினம் டாஸ்மாக் மது அருந்தி இருவர் உயிரிழந்த நிலையில், விஷ சாராய விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via