ரஷ்யாவின் அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு ஜப்பான் கண்டனம்
ஜப்பானின் ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசி இன்றுடன் 78 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவோம் என்ற ரஷ்ய மிரட்டல்களை ஜப்பான் பிரதமர் கடுமையாக விமர்சித்துள்ளார். ஆகஸ்ட் 6, 1945-இல் ஹிரோஷிமாவில் சுமார் 140,000 பேரும், நாகசாகியில் 74,000 பேரும் ஜப்பானிய நகரங்கள் மீது அமெரிக்கா அணுகுண்டுகளை வீசியபோது இறந்தனர். 2ஆம் உலகப்போரில் அணுகுண்டு வீச்சுகளை சந்தித்த ஒரே நாடான ஜப்பான், அணுசக்தி இல்லாத உலகத்தை நோக்கிய முயற்சிகளை தொடரும் என்று ஹிரோஷிமாவில் நடந்த விழாவில் பிரதமர் ஃபுமியோ கிஷிடா கூறினார்.
Tags :