குடும்ப தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை

by Staff / 06-08-2023 03:13:10pm
குடும்ப தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை

திருவட்டார் அருகே உள்ள செங்கோடி நெடுமானூர் விளையை சேர்ந்தவர் ஐசக் ராஜ்குமார் (வயது47). தனியார் ஆம்னி பஸ்சில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி ஜினி மலர் (37). இவர்களுக்கு 11, 15 வயதில் 2 மகன்கள் உண்டு. ஜினிமலர் சுய உதவிக்குழுவில் ேசர்ந்துள்ளார். இவர் பலருக்கு ஜாமீன் கையெழுத்து போட்டு கடன் எடுத்து கொடுத்துள்ளார். இதை கணவர் கண்டித்துள்ளார். நேற்று முன்தினம் ஜினி மலர் குழு சம்மந்தமாக வெளியே சென்று விட்டு வீட்டுக்கு வந்த போது, கணவன் மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த ஜினிமலர் சமையல் அறைக்கு சென்று அங்கு இருந்து மண்எண்ணெய்யை தன் மீது ஊற்றி தீக்குளித்தார். உடல் முழுவதும் தீ எரிந்த நிலையில் அலறினார். அவரது சத்தம் கேட்டு ஐசக் ராஜ்குமார் விரைந்து வந்து தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தார். தொடர்ந்து படுகாயத்துடன் கிடந்த ஜினி மலரை மீட்டு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் ஜினி மலர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via