விளாத்திகுளம் கிட்டங்கியில் பதுக்கி வைக்கப்பட்ட 800 கிலோ  புகையிலை பொருட்களை பறிமுதல்

by Admin / 09-06-2024 02:10:03pm
விளாத்திகுளம் கிட்டங்கியில் பதுக்கி வைக்கப்பட்ட 800 கிலோ  புகையிலை பொருட்களை பறிமுதல்

விளாத்திகுளம் கிட்டங்கியில் பதுக்கி வைக்கப்பட்ட 800 கிலோ  புகையிலை பொருட்களை பறிமுதல் -பதுக்கி வைத்திருந்த பாஜக ஒன்றிய செயலாளரை கைது.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணனுக்கு காடல்குடி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் ஒரு கிட்டங்கியில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில்  தனிப்படை போலீஸார் புதூர் அருகே காடல்குடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது காடல்குடி அருகே கந்தசாமிபுரத்தில் உள்ள ஒரு கிட்டங்கியின் அருகே நின்ற வாகனத்தில் சோதனையிட்டபோது, அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் சுமார் 800கி வரை இருந்தது. இதையும், புகையிலை பொருட்கள் கடத்த பயன்படுத்தப்பட்ட வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீஸார், கிட்டங்கி உரிமையாளர் அதே கிராமத்தைச் சேர்ந்த பழனிமுருகன்(45) என்பவரை கைது செய்து, விளாத்திகுளம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்ட பழனி முருகன், புதூர் ஒன்றிய பாஜக செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

மேலும் இது தொடர்பாக விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த  மோகன்தாஸ் (40), கேரள மாநிலத்தைச் சேர்ந்த முகமது சவில் (38), கெபிப்(34) ஆகியோரையும் கைது செய்து விளாத்திகுளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

விளாத்திகுளம் கிட்டங்கியில் பதுக்கி வைக்கப்பட்ட 800 கிலோ  புகையிலை பொருட்களை பறிமுதல்
 

Tags :

Share via