தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது.

by Editor / 18-06-2024 09:17:19am
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது.


இந்திய  கடல் எல்லையின் பல்வேறுபகுதிகளில் மீன் பிடிதடைக்காலம் முடிந்து கடந்த 16 ஆம் தேதி முதல்  மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகிறார்கள். இந்த நிலையில், நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டு இருந்த தமிழக மீனவர்கள் நான்கு பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மீனவர்களை படகுகளுடன் சிறை பிடித்த இலங்கை கடற்படை, இலங்கையில் உள்ள கடற்படை முகாமில் வைத்து விசாரணை நடத்தி வருகிறது. கைதான மீனவர்கள் 4 பேரும் ராமநாதபுரத்தில் இருந்து மீன் பிடிக்க சென்றவர்கள் ஆவர். தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சம்பவம் மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags : தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது

Share via