தமிழகம் அரசியல் விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதாக புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வேதனை.
உத்திரப் பிரதேசம் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் அரசியல் விழிப்புணர்வு அடைந்திருக்கும் நிலையில் தமிழகம் அரசியல் விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதாக புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வேதனையுடன் தெரிவித்தார்
தென்காசி மாவட்டம் தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தனக்கு வாக்களித்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தை நடத்தினார் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி அதிமுக கூட்டணி கட்சியோடு இணைந்து தென்காசி பாராளு மன்ற தேர்தலில் போட்டியிட்டார் இந்த நிலையில் அவருக்கு இரண்டு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் கிடைத்தன வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நன்றி தெரிவிப்பு கூட்டத்தில் கலந்து கொண்டார் இதில் கலந்துகொண்டு தனக்கு வாக்களித்த பொதுமக்களுக்கும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்த அவர் இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் அரசியல் விழிப்புணர்வு பெற்றதாக தமிழகத்திலிருந்து மாதர் தட்டி பேசுகிறோம் ஆனால் உண்மையில் தமிழகம் அரசியல் விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதாகவும் உத்தரப்பிரதேசத்தில் கூட பொதுமக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு வந்துவிட்டதாகவும் தமிழகத்தில் இந்த விழிப்புணர்வு இல்லை என அவர் வேதனையுடன் தெரிவித்தார் இந்த நிகழ்ச்சியில் அதிமுக தேமுதிக உள்ளிட்ட தோழமைக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Tags : தமிழகம் அரசியல் விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதாக