ரயில் மறியல் போராட்டம் காங்கிரசாருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு -சட்டைக்கிழிப்பு. 

by Editor / 15-04-2023 09:56:08pm
ரயில் மறியல் போராட்டம் காங்கிரசாருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு -சட்டைக்கிழிப்பு. 

ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற காங்கிரசாருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு -வாக்குவாதம் சட்டைக்கிழிப்பு. 

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பதவி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பல்வேறு கட்டங்களாக.காங்கிரசார் தொடர் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

 அந்த வகையில், இன்று தென்காசி மாவட்டம் செங்கோட்டை ரயில் நிலையத்தை தென்காசி மாவட்ட காங்கிரஸ் கட்சியினரின் முற்றுகை போராட்டமானது தற்போது நடைபெற்று வருகிறது.

முன்னதாக, ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், செங்கோட்டை ரயில் நிலையத்தில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில், 100க்கும் மேற்பட்ட காங்கிரசார் செங்கோட்டை ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக வருகை தந்தனர்.

 அவர்களை போலீசார் பேரிக்காடுகளை வைத்து தடுத்து நிறுத்திய நிலையில், போலீசார்களுக்கும், காங்கிரசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

 மேலும், தாங்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதை ஏன் தடுக்கிறீர்கள் என காங்கிரசார், போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஏற்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது .

இந்த நிலையில், தற்போது செங்கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பு 100க்கும் மேற்பட்ட காங்கிரசார் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் தலைமையில் தொடர்ந்து சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பான நிலை உருவானது.


ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு முன்பே காங்கிரசாரை போலீசார் கைது செய்த சூழலில் போலீசாருக்கும், காங்கிரசார்க்கும் இடையே கடும் வாக்குவாதம் நிலவியது.

அதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை போலீசார் கைது செய்து வாகனத்தில் அழைத்து சென்ற நிலையில் சற்று தூரம் சென்ற வாகனத்தை காங்கிரசார் மறித்து சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு நிலவியதுஇந்த ஆர்ப்பாட்டத்தில் தனியாக சென்று போலீஸ் திசை திருப்பும் வகையில் சில இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் பிரமுகர்கள் கைது செய்யப்பட்டனர் போலீசாருக்கும் காங்கிரஸ் பிரமுகர்களுக்கும் நடந்த தள்ளுமுள்ளுவில் காங்கிரஸ் பிரமுகர்களின் சட்டைகளும் கிழிந்தன

 

Tags :

Share via