ரயில் மோதி இளம்பெண் பலி....காரணமென்ன ..காவல்துறை விசாரணை.

by Editor / 15-04-2023 09:52:15pm
ரயில் மோதி இளம்பெண் பலி....காரணமென்ன ..காவல்துறை விசாரணை.

தென்காசி மாவட்டம் ஆய்க்குடி சாலையில் அமைந்துள்ளது அனந்தபுரம் இந்தப் பகுதியில் உள்ள மின்வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் இசக்கி இவருடைய 19 வயது மகள் பார்வதி இவர் கடந்த 14ஆம் தேதி இரவு 9 மணி அளவில் அனந்தபுரம் ரயில்வே கேட்டிற்கு அருகில் தண்டவாளத்தின் ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்த பொழுது மயிலாடுதுறையில் இருந்து செங்கோட்டை நோக்கி சென்ற பயணிகள் விரைவு ரயில் மோதி பரிதாபமாக பலியானார். இது குறித்து தகவல் அறிந்த ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த இளம்பெண்  ரயில் முன் இவர் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா.. இல்லை எதிர்பாராத விதமாக ரயில் மோதியதா.. இரவு நேரத்தில் ஆள்நடமாட்டமில்லாத நேரத்தில் அந்தப்பகுதியில் எதற்காக இளம்பெண் சென்றார்...உள்ளிட்ட பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags :

Share via