பொற்கோயில் அருகே குண்டுவெடிப்பு
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயில் அருகே குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. பொற்கோயிலில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹோட்டலுக்கு அருகில் இந்த வெடிப்புச் சம்பவம் நடந்துள்ளது. பலர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெடி விபத்துக்கான காரணம் தெளிவாக தெரியவில்லை. தடயவியல் குழுவினர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து வருகின்றனர். பயங்கரவாத தாக்குதல் சம்பவமா? என விசாரணைக் குழுவினர் மேலதிக விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Tags :