ஆப்ரேஷன் கஞ்சா வேட்டை - 659 பேர் கைது
டிஜிபி சைலேந்திர பாபுவின் கஞ்சா வேட்டை 4.0 என்ற ஆபரேஷன் கடந்த ஆறு நாட்களில் சுமார் 659 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 728 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 15 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த கஞ்சா வியாபாரிகளின் 41 வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து ரெண்டு லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் போதைப் பொருள் விற்பனை குறித்த தகவல்களை 0442847701 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் என்று காவல்துறை பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.
Tags :