கழிவு நீர் மரணங்களை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலின்அதிரடி உத்தரவு

by Staff / 22-05-2023 04:19:18pm
கழிவு நீர் மரணங்களை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலின்அதிரடி உத்தரவு

தமிழ்நாட்டில் கழிவு நீர் மரணங்களை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாதாள சாக்கடை, கழிவுநீர் தொட்டிகளை மனிதர்களே சுத்தம் செய்யும் நடைமுறை மானுடத்திற்கே களங்கமாய் விளங்குகிறது. எனவே நவீன இயந்திரம் மூலமாக கழிவு நீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் திட்டத்தை 4 மாதங்களில் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்” என அரசு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

 

Tags :

Share via