சிங்கப்பூர் புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சிங்கப்பூர் பயணம் மேற்கொள்கிறார். 9 நாட்கள் அரசு முறைப் பயணமாக தொழில் முதலீடுகளை ஈர்க்க சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு அவர் பயணம் செய்கிறார். வரும் 2024ஆம் ஆண்டு ஜனவரியில் சென்னையில் நடக்கும் உலக முதலீட்டாளர் மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கும் வகையில், சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு பயணிக்கிறார். முதலமைச்சருடன் தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, துறை சார்ந்த அதிகாரிகளும் செல்கின்றனர். புதிய முதலீடுகளை ஈர்க்கவும், தொழிலதிபர்களை சந்திக்கவும் முதலமைச்சர் திட்டமிட்டுள்ளார். சென்னை விமான நிலையத்தில் அமைச்சர்கள், திமுகவினர் வாழ்த்து தெரிவித்து வழியனுப்பினர்.
Tags :