ஹரித்வார்,வாரணாசி உள்ளிட்ட இடங்களை சுற்றிப்பார்க்க பாரத் கௌரவ் சிறப்பு ரயில் - தெற்கு ரயில்வே அறிவிப்பு

by Staff / 05-07-2023 03:49:13pm
ஹரித்வார்,வாரணாசி உள்ளிட்ட இடங்களை சுற்றிப்பார்க்க பாரத் கௌரவ் சிறப்பு ரயில் - தெற்கு ரயில்வே அறிவிப்பு உஜ்ஜைன், ஹரித்வார்,வாரணாசி உள்ளிட்ட இடங்களில் அமைந்துள்ள முக்கிய கோவில்களை சுற்றிப்பார்க்க பாரத் கௌரவ் சிறப்பு சுற்றுலா ரயிலை ஐ.ஆர்.சி.டி.சி -யின் தென்மண்டலம் சார்பில் ஏற்பாடு செய்துள்ளது. இந்திய ரயில்வே துறையின் சுற்றுலா பிரிவான ஐ.ஆர்.சி.டி.சி தென்மண்டலம் சார்பில்  "ஆடி அமாவாசை சிறப்பு யாத்திரை என்ற  பெயரில் உஜ்ஜைன், ஹரித்வார்,ரிஷிகேஷ்,வாரணாசி மற்றும் கயா உள்ளிட்ட 5 இடங்களில் அமைந்துள்ள முக்கிய கோவில்களை சுற்றிப்பார்க்க 12 நாட்கள் பயணத்துடன் பாரத் கௌரவ் சிறப்பு சுற்றுலா ரயிலை ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி கேரளா மாநிலம் கொச்சுவேலியிலிருந்து ஆகஸ்ட் 7 ஆம் தேதி திங்கட்கிழமை நள்ளிரவு 12.30 புறப்படும் சிறப்பு ரயிலானது திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம்,மயிலாடுதுறை, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர், விழுப்புரம், சென்னை எழும்பூர் வழியாக குஜராத் மாநிலம் பனாரஸ் வரை இயக்கப்டுகின்றது. இந்த சுற்றுலா ரயிலில் பயணிப்பவர்களுக்கு உள்ளூர் பார்வையிடுவதற்கான போக்குவரத்து, ரயில் பயணத்தின் போது சைவ உணவு, பயண காப்புறுதி என உள்ளடக்கி படுக்கை வசதியுடன்  நபர் ஒன்றுக்கு ரூ.22,350/- மற்றும் மூன்றாம் வகுப்பு குளிர்சாதன படுக்கை வசதியுடன் ரூ.40,380/- கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ரயிலில் பயணிக்க விருப்பமுள்ளவர்கள் www.irctctourism.com என்ற இணையாதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் இது தொடர்பான விபரங்களுக்கு 9003140680/682,  மதுரை 8287932122, திருச்சி 8287932070, கோயம்புத்தூர் 9003140655 குறிப்பிட்ட எண்களில் தொடர்பு கொண்டு அணுகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Tags :

Share via