இளைஞரை கொன்று செல்போன் திருட்டு
தலைநகர் டெல்லியில் கொள்ளையர்கள் ஒருவரை கொடூரமாக கொன்று செல்போனைத் திருடிச் சென்ற சம்பவம் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் காஷ்மீரி கேட் பகுதியில் இளைஞர் ஒருவர் தனது வீட்டிற்கு வெளியே அமர்ந்து தனது செல்போனை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த இரண்டு கொள்ளையர்கள் அவரை கத்தியைக் காட்டி மிரட்டி கொள்ளையடிக்க முயன்றனர். கழுத்தில் கத்தியை வைத்து செல்போனை பறித்துள்ளனர். இளைஞர் இதனை எதிர்த்த போது, கொள்ளையர்கள் கழுத்தை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பியோடினர். இதில் அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
Tags :