மரம் விழுந்து இருவர் பலி

உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னூரில் பெய்த கன மழையால் சுற்று வட்டார பகுதிகளில் பெரும் சேதம் ஏற்பட்டது. கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக சாலையோரத்தில் உள்ள கார் மற்றும் பைக் மீது பெரிய மரம் ஒன்று விழுந்தது. இதனை தொடர்ந்து காரில் இருந்த இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் விபத்தில் இருவர் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
Tags :