டாஸ்மாக் பாரில் கொள்ளை-ஏற்கனவே பாரில் பணியாற்றிய நபர் ஈடுப்பட்டதாக தகவல்.

by Editor / 31-05-2023 10:19:23am
டாஸ்மாக் பாரில் கொள்ளை-ஏற்கனவே பாரில் பணியாற்றிய நபர் ஈடுப்பட்டதாக தகவல்.

தென்காசி மாவட்டம் குற்றாலம் -பழைய குற்றாலம் சாலை ஆயிரப்பேரி விலக்கு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை பாரில் நேற்று இரவு மர்ம நபர்கள் புகுந்து அங்கிருந்த சிசிடிவி கேமராவை மற்றும் பாரில்  இருந்த பொருட்களை அடித்து  சேதப்படுத்தியதோடு பாரில் நுழைந்து அங்கிருந்த 58 ஆயிரம் ரொக்கப்பணம்,100 பாக்கெட் சிகரெட்,பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.இது பற்றி குற்றாலம் காவல் நிலையத்தில் பார் உரிமையாளர் வசந்த் என்பவர் புகார் செய்தார்,புகாரைத்தொடர்ந்து அங்கு விரைந்துசென்ற குற்றாலம் போலீசார் ஆய்வுகளை  மேற்கொண்டு சி.சி.டி.வி.கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.மேலும் இந்த கொள்ளைச்சம்பவத்தில் ஈடுப்பட்ட நபர் காவலர் ஒருவரின் சிபாரிசில் இந்த மதுப்பானபாரில்  கடந்த பிப்ரவரிமாதம் வரை பணியாற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via