கோவில்பட்டியில் 12 லட்சம் மதிப்பிலான திட்ட பணிகளை முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்

by Admin / 26-06-2023 09:42:33am
கோவில்பட்டியில் 12 லட்சம் மதிப்பிலான திட்ட பணிகளை முன்னாள் அமைச்சர்  கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்   கோவில்பட்டியில் 12 லட்சம் மதிப்பிலான திட்ட பணிகளை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள லட்சுமி மில் மேல காலனி மாவட்ட கவுன்சிலர் நிதியிலிருந்து ரூபாய்  8 லட்சம் மதிப்பில் புதிதாக பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியை முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். பின்னர் கோவில்பட்டி அருகே இனாம்மணியாச்சி ஊராட்சிக்கு உள்பட்ட சீனிவாச நகர் 1வது தெருவில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 4 லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்ட பேவர் பிளாக் சாலையை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு ரிப்பன் வெட்ட திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவி சத்யா, ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் பழனிச்சாமி,ஆவின் கூட்டுறவு சங்கத் தலைவர் தாமோதரன், முன்னாள் ஒன்றிய செயலாளர் போடுசாமி, மாவட்ட மாணவர் அணி துணைத்  தலைவர் செல்வகுமார், இனாம்மணியாச்சி பஞ்சாயத்து துணைத் தலைவர் ரேவதி, அதிமுக நிர்வாகிகள் அழகர்சாமி, கதர் ஸ்டார் ராமசுப்பு, அம்பிகை பாலு, வாட்டர் போர்டு கண்ணன், அல்லித்துரை, கடம்பூர் மாயாதுரை, கோபி, உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர். கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்   கோவில்பட்டியில் 12 லட்சம் மதிப்பிலான திட்ட பணிகளை முன்னாள் அமைச்சர்  கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்
 

Tags :

Share via