ஆலங்குளம் அருகே இடத்தகராறு காரணமாக வழக்கறிஞர் உள்ளிட்ட 2பேர் வெட்டிக்கொலை.

by Editor / 29-06-2023 11:03:39pm
ஆலங்குளம் அருகே இடத்தகராறு காரணமாக வழக்கறிஞர் உள்ளிட்ட 2பேர் வெட்டிக்கொலை. தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் &nbsp;கிராமத்தில் வழக்கறிஞர் அசோக்குமார் என்பவருக்கும் அவரின் பக்கத்து வீட்டில் வசிக்கும் ராணுவ வீரர் சுரேஷ்க்கும் நிலத்தகராறு இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு அசோக்குமாருடைய வைக்கோல் படப்பில் தீ வைக்கப்பட்டதாக அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இன்று காலை ஆலங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் ராணுவ வீரர் சுரேஷ் வழக்கறிஞர் அசோக்குமார் என்பவர் ஊருக்கு வந்திருந்த நிலையில் அவருக்கும் அசோக்குமாருக்கும் தொடர்ந்து சொத்து தகராறு இருந்து வருகிறது. இந்த நிலையில் இன்று இரவு இருவருக்கும் வாய்த்தகராறு &nbsp;ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இதில் &nbsp;ராணுவ வீரர் சுரேஷ் வழக்கறிஞர் அசோக்குமார் என்பவரை அரிவாளால் &nbsp;வெட்டி படுகொலை செய்தார்.மேலும் அவரது பெரியப்பா துரைராஜ் என்பவரையும் அரிவாளால் வெட்டி உள்ளார். இதில் அவரும் படுகாயம் அடைந்தார். இது குறித்து தகவல் அறிந்த ஆலங்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அசோக்குமார் உடலை கைப்பற்றி அவரது பெரியப்பா துரைராஜை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுவந்த நிலையில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுசெல்லப்பட்ட &nbsp;துரைராஜும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது சம்பவம் நடந்த இடத்தில் தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சாம்சன்,மற்றும்அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். <br /> &nbsp;
 

Tags :

Share via